tamilnadu

img

திருமுக்குளத்தை கண்டுகொள்வாரா விருதுநகர் ஆட்சியர்?

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திரு முக்குளம் நகரின் மையப் பகுதியில் உள்ளது பழமையும் தொன்மையும் வாய்ந்த இந்தக் குளத்தின் சுற்றுச் சுவர்கள் இடிந்துவிழுந்துவிட்டது. குளத்தின் பல் வேறு இடங்களில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று திருமுக்குளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நகர் செயலாளர் ஜெயக் குமார், ஒன்றியச் செயலாளர் சசிகுமார், ரேணுகாதேவி, மாவட்டக்குழு உறுப்பினர்  திருமலை,மரிய டேவிட், மாவட்ட ச்செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி உட்படஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;