tamilnadu

img

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்

திருவில்லிபுத்தூர்
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட குழுவின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளான  செவ்வாயன்று கொரோனா  ஊரடங்கால்  வேலை இழந்து வாடும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அரிசி, பலசரக்கு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.காளிதாசன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எம்.ஜவகர், தொழிலாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .   சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் எம். திருமலை ,நகர செயலாளர் வி.ஜெயக்குமார் ,பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எம். ராமசுப்பிரமணியன் ,சக்திவேல், எட்வர்டு  உட்பட பலர் கலந்து கொண்டனர்

;