tamilnadu

காலியாக கிடக்கும் குடிநீர் தொட்டி குடிநீருக்கு தவிக்கும் பயணிகள்

திருவில்லிபுத்தூர்:
கொரோனா பொதுமுடக்கத் தளர்வுகளை அடுத்து பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூருக்கும் பேருந்துகள் வந்து செல்கின்றன. பயணிகள் கூட்டமும் அதிகமுள்ளது. பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஒருவாரமாக தண்ணீர்நிரப்பப்படவில்லை. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் விலை கொடுத்து அம்மா தண்ணீர் பாட்டில் உள் ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்குகின்றனர் திருவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் குடிர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;