tamilnadu

img

நன்னிலம் ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பு

குடவாசல், டிச.19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. 4-ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பொறுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், தமிழக முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் நன்னிலம் வட்ட கிளைச் செயலாளர்  ஜெ.முகமது உதுமான் மற்றும் திருமியச்சூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், திருமியச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி நன்னிலம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.  திருமியச்சூரில் புதன்கிழமை காலை துவங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணம் மாலை வரை நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி. வீரபாண்டியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தனர். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். வாக்கு சேகரிப்பில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலலவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.