tamilnadu

img

திருவாரூர் - காரைக்குடிக்கு மீண்டும் ரயில் சேவை துவக்கம்

திருவாரூர்:
திருவாரூர் - காரைக்குடி இடையே பத்து ஆண்டுகளுக்குபின்னர் மீண்டும் ரயில் சேவை சனிக்கிழமையன்று துவங்கியது.

திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை அகல ரயில்பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை பணி நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து ரயில் சேவையை நாகை எம்.பி., செல்வராஜ் டியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்கிறது.

காலை 8.15 மணிக்கு திருவாரூரில் புறப்படும் இந்தரயில் மதியம் 2.15 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.காரைக்குடியில் இருந்து மீண்டும் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும். 

;