tamilnadu

img

கோவிலுக்கு தமது நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்

மன்னார்குடி, ஆக.3-  காரைக்கால் கீழ காசாக்குடியில் உள்ள காஞ்சிபுரம் கோவில்பத்து சாலையோரம் புதிதாக முனீஸ்வரன் கோவில்  கட்டப்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான அந்த இட த்தையும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் காரைக்கால் தொழிலதிபர் சின்னத்தம்பி என்கிற அப்துல்காதர் கடந்த 15  ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கினார்.  தற்போது அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் கோவில் உள்ள நிலப்பரப்பை அந்த கோவிலுக்கே அப்து ல்காதர் தானமாக வழங்கியுள்ளார். இதற்கான ஆவணங்கள்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. புதுவை  மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் கோவில் நிர்வாகி பசுபதியிடம் நிலத்தி ற்கான ஆவணத்தை அப்துல்காதர் ஒப்படைத்தார்.