மன்னார்குடி, ஜூலை 7- கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் மாவட்டத்தை தமிழக அரசு விரை வில் அறிவிக்க வேண்டுமென சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் காமகோடி கேட்டுக் கொண்டுள்ளார். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி போராட்டக்குழு அமை க்கப்பட்டு தொடர்ந்து ஒருமாத காலமாக போராட்ட ங்களை நடத்தி வருகின்றனர். ஜூலை 10 அன்று அர சின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருவாய் கோட்ட அளவில் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வீடுகள் முன்பாக பல வண்ணக் கோலங்களை போடு வதென போராட்டக்குழு சார்பில் பெண்கள் முடிவெ டுத்துள்ளனர். இதையடுத்து ஜூலை 17 அன்று அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முழு கடைய டைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் போராட்டக்குழுவின் ஒருங்கி ணைப்பாளர் ஸ்டாலின் தலைமையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடியை சந்தித்து கோரிக்கையை குறித்து விளக்கியும், தொடர் போராட்ட விளக்கக் கை யேட்டையும் வழங்கினர்.