மன்னார்குடி, ஆக.13- தொலைத் தொடர்பு துறையை பொதுத் துறையை பலி கொடுப்பவர்கள் தேசத்துரோகிகளா அல்லது இதை அம்பலப் படுத்தி எதிர்த்துப் போராடுபவர்கள் தேசத் துரோகிகளா என முழக்கத்துடன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் மன் னார்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.செல்லையன் தலைமை வகித்தார். தொலைத் தொடர்பு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஜி. சேகர், எம்.சேகர், ஏஐடியுசி தலைவர் எம் சின்னக் கண்ணு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில பொறுப்பாளர்கள் கே.அகோரம், வி.கோவிந்த ராஜ் கண்டன உரையாற்றினர். என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கே.கிள்ளிவளவன் உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். நிறைவாக முகமது யாசின் நன்றி கூறினார். இதே போல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமையில் நடைபெற்றது .மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், பொரு ளாளர் ப.அந்துவன்சேரல், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் சு.சிவகுமார், சு.மணி பேசி னர். கே.ராஜு நன்றி கூறினார்.