திருவாரூர், ஜூன் 1- தூர்வாரும் பணிகளை முறைகேடு இல்லா மல் வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரிலுள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமையேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் வி.சுப்ரமணி யன் பங்கேற்று கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள், பொருளாளர் எஸ்.சாமிநாதன், மாவட்ட நிர்வாகிகள் எம்.சேகர், வி.பவுன்ராஜ், தியாகுரஜினிகாந்த், கே.தமிழ்ச்செல்வி, என்.எம்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுங்கட்சியினரின் அட்சயப் பாத்திரம்
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்க ளிடம் பேசிய மாநிலத் தலைவர் வி.சுப்ரமணி யன், குடிமராமத்து பணி என்பது ஆளுங்கட்சியி னரின் அட்சயபாத்திரம் போல் திகழ்கிறது. மே 20ந் தேதி டெண்டர் விடப்பட்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் சூழ்நிலை யில் எவ்வித கண்காணிப்பு ஏற்பாடுமின்றி பணி கள் தரமற்ற முறையில் நடைபெற்றுவருகிறது. இதனை கண்டித்து நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் அரசின் நடவடிக்கை சரியில்லை யென்றால் விவசாயிகளை திரட்டி சாலை மறியலுக்கு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப் படும். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பொதுப்பணித்துறை வெண் ணாறு வடிநில கோட்ட தலைமை வரைவாளர் வி.குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில கோட்ட பொ துப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித் தார், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஞானமாணிக்கம், பி.எம்.காதர் உசேன், கே. முனியாண்டி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். மாலதி, மாநகரச் செயலாளர் என்.குருசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, வீரப்பன், நம்பிவயல் பாலு, ஜீவானந்தம், ஆரோக்கியசாமி, மாரிமுத்து உள்ளிட்ட 25 பேர் கலந்து கொண்டனர்.
திருவோணம்
திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரம் பொ துப்பணித்துறை அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி. கோவிந்தராசு, விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, விதொச ஒன்றியச் செயலாளர் ஆர். சின்னப்பா, ஒன்றியத் தலைவர் பாஸ்கர் கலந்து கொண்டனர்.
பூதலூர் தெற்கு
பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூதலூ ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செய லாளர் பாலசுப்பிரமணியன், செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கமணி ஆகியோர் தலைமை வகித்தனர் பூதலூர் வடக்கு ஒன்றியம், தோகூர் கல்லணையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்து க்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி முரு கேசன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.காந்தி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சம்சுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் சிவசாமி, சந்திரா, நிர்வாகிகள் எம்.ரமேஷ், எம்.பாஸ்கரன், மாதர் சங்கம் பி.கலைச் செல்வி, தோழமை விவசாய சங்க நிர்வாகிகள் கோவிந்தராசு, செங்குட்டுவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு பொதுப்பணித்துறை அலு வலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலை வர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.சுரேஷ்குமார்,கோவிந்த ராஜ், பாஸ்கர், ஜெய்சங்கர் மற்றும்ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மதுக்கூர் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், ஏ.எம். வேதாச்சலம், வாட்டாகுடி ஊராட்சி தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேலு நிறைவுரையாற்றினார். விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில், பேராவூரணி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க நிர்வாகி வி.கருப்பையா தலைமை வகித்தார். நிர்வாகிகள் வி.ச. தமிழநேசன், நீலகண்டன், சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் வேலுச்சாமி, விதொச இளங்கோ, முருகை யன் கலந்து கொண்டனர். திருவையாறு ஒன்றியம் சார்பில், திருக்காட்டுப்பள்ளி பொதுப்பணித்துறை அலு வலகத்தில, கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம் தலைமையில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் துரை.ராமலிங்கம், சிஐடியு சங்கரன், விவசாயி கள் சங்கம் பிலோமின் ராஜ் உள்ளிட்ட 21 விவசாயிகள் கலந்து கொண்டனர்.