திருவாரூர் மாவட்ட ஊராட்சி சாதாரணக் கூட்டம் ஊராட்சி தலைவர் ஜி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஆர்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார். செயலர் ம.கண்ணன், உறுப்பினர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ரூ.3.45 கோடி மதிப்பிலான 46 சாலை மற்றும் குடிநீர் பணிகள் உட்பட மொத்தம் ரூ.135.55 கோடி மதிப்பிலான வளர்சசிப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது