மன்னார்குடி, ஜூன் 2- தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது ரேசன் கார்டு இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 5,000 வரை லோன் பெற்றுக் கொண்டு ஓராண்டிற்குள் தவணை முறையில் செலுத்த லாம் என அறிவித்தார். இந்நிலை யில், பொதுமக்கள் இதனை ஆதாரமாக வைத்து கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் கூறியது போன்று அரசாணை எதுவும் வரவில்லை. இப்போதுள்ள நிதி நிலைமையில் சாத்தியமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல் ரூ 5,000 லோன் வழங்கப்பட்டு இன்றுவரை லோன் வாங்கியவர்கள் கட்ட வில்லை என்று கூறினர்.