மன்னார்குடி, ஆக.1- பெயரளவில் உள்ள முத்துப் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே வசதி வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர் கவனிப்பு வேண்டும், ஏற்கனவே இருந்த ஐந்து மருத்துவர் முறை மீண்டும் செயல் படுத்தப்படவேண்டும். போதுமான செவிலியர் நியமிக்கப்பட வேண்டும், சுகாதாரப் பணியாளர்ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளு டன் அனைத்து மருத்துவ வசதிகளு டன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி நூதன போராட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு சார்பாக வியாழ னன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சி.செல்ல துரை தலைமை ஏற்றார். மாவட்டக்குழு உறுப்பி்னர் கே.வி.ராஜேந்திரன். ஒன் றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணி யன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கை கால் தலை உள் ளிட்ட இடங்களில் கட்டுப் போட்டுக் கொண்டும் வாயில் துணி கட்டிக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி சிறப்புரையாற்றி போரட்டத்தை முடித்து வைத்தார்.