மன்னார்குடி, பிப்.16- மக்களை காக்கும் மகத்தான பணியில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம், இதன் மூலம் புதிய தொற்று நோய்கள் மற்றும் புதிய நோய்கள் பரவாமல் தடுக்க முடியும். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சார்பாக தஞ்சை மீனாட்சி மருத்துவ மாத இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி தஞ்சை யில் நடைபெற்றது. விழாவில் மீனாட்சி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் வர வேற்புரை நிகழ்த்த, புற்றுநோய் கதிரியக்க சிறப்பு மருத்து வர் சசிகுமார் மருத்துவ இதழ் குறித்த விளக்கவுரையும், இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனைகளின் வாரிய மாநிலத் தலைவர் டாக்டர் ஸ்ரீதர் மருத்துவ இதழ் முதல் பிரதியை வெளியிட்டார். பிரதியை அகில இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் வரதராஜன் பெற்றுக் கொண்டார். விழாவில் விநாயக மிசின் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அம்புஜம், டாக்டர் இளங்கோவன், மீனாட்சி மருத்துவ மனை தலைமை நிர்வாகி டாக்டர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவணவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாடு களை மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்கா ணிப்பாளர் டாக்டர் பிரவீன் தலைமையிலான குழுவினர் செய்தி ருந்தனர்.