திருவாரூர் , ஜூலை 25- திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், தென்குவளவேலி ஊராட்சிக்கு உட்பட்ட தேவமங்கலம் காலனித்தெருவில் வசித்து வரும் சி.முத்து – மாரியம்மாள் தம்பதி யரின் மகள் மு.லெட்சுமி(23) எம்.காம் பட்டதாரி. இவர் 5 வருடங்களாக தன்னை காத லித்து ஏமாற்றிய இளைஞனிடம் தனது வாழ்க்கையை மீட்பதற்காக தொடர் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த வி.சேகர் - ரேணு காதேவி தம்பதியினரின் மகன் எஸ்.சந்திரன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தற்கா லிக ஊழியராக வலங்கைமானில் பணி புரிந்து வருகிறார். “சந்திரன் ஏற்கனவே வேளாங்கண்ணி யில் வைத்து என்னை திருமணம் செய்து விட்டார். நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டோம்” என்று ஜூன் 21 அன்று சந்திரன் வீட்டிற்குச் சென்று கூறிய லெட்சுமி, தனக்கான நியாயத்தை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் லெட்சுமியை தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான இளம்பெண் லெட்சுமி அரித்துவாரமங்கலம் காவல்நி லையத்திற்குச் சென்று புகார் அளித்து ள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்து றையினர் நன்னிலம் அனைத்து மகளிர் காவ ல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க கூறியுள்ளனர்.
மகளிர் காவல் நிலையத்திலும் புகாரை வாங்க தாமதப்படுத்தியுள்ளனர். அங்கு திரண்டிருந்த சந்திரனின் பெற்றோ ரது உறவினர்கள் மீண்டும் லெட்சுமி மற்றும் அவரது வயதான தாயாரை தாக்கியுள்ளனர். இந்நிலையில் 24.06.2020 அன்று திருத்து றைப்பூண்டி அருகே விஸ்வநாதபுரம் கிரா மத்தில் ஒரு கோவிலில் வைத்து சந்திர னுக்கும் வேறொரு பெண்ணுக்கும் அவசர அவசரமாக திடீர் திருமணம் நடைபெற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த லெட்சுமி அதே நாளில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஆகியோரிடம் தனது வாழ்வை சீரழித்த சந்திரனின் பெற்றோர் மற்றும் சந்திரனின் சகோ தரி குடும்பத்தினர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன்னுடன் சந்தி ரனை சேர்த்து வைக்க வேண்டுமென்றும் கூறி மனு அளித்துள்ளார்.
பொய்ப்புகார் பெற்று காவல்துறை தாக்குதல்
இந்த பின்னணியில் திடீரென்று அரித்து வாரமங்கலம் காவல்துறை சேகர் - ரேணு காதேவி குடும்பத்தினரிடம் பொய் புகார் ஒன்றை கேட்டுப்பெற்று அதன்மீது நடவ டிக்கை எடுப்பதாக கூறி லெட்சுமியின் வீட்டி ற்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர். லெட்சுமி மற்றும் அவரது தாயாரிடம் அரித்துவாரமங்கலம் காவல் உதவி ஆய்வா ளர் இராதாகிருஷ்ணன் மற்றும் காவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் ஈரோட்டில் கூலி தொழில் செய்து கொண்டிருக்கும் லெட்சுமி யின் அண்ணன் குறித்து விசாரித்துள்ளனர். பெண் காவலர்களை உடன் அழைத்துச் செல்லாத காவல் உதவி ஆய்வாளர் மிரட்டும் தொனியில் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனால் அச்சம் அடைந்த இளம்பெண் லெட்சுமி தனது மொ பைல் போன் மூலமாக காவலரின் விசார ணையை படம் பிடித்துள்ளார். இதனால் ஆத்தி ரமடைந்த காவலர்கள் பெண்கள் என்றும் பாரா மல் அவர்களை அடித்து கீழே தள்ளியதுடன் செல் போனை பறிப்பதற்காக லெட்சுமியின் இடது கையை முறுக்கி முரட்டுத்தனமாக நட ந்துள்ளனர். லெட்சுமியின் முதுகு மற்றும் தலைப்பகுதிகளில் அடிபட்டு இரத்த காய த்துடன் வலங்கைமான் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைப் பெற்று, திருவாரூர் அரசு மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. தலையிட கோரிக்கை
இந்த பிரச்சனை குறித்து இதில் சம்ப ந்தப்பட்ட அனைவரையும் நேரில் சந்தித்து விசாரித்த போது எம்.காம் முதுகலை பட்ட தாரியான இளம்பெண் லெட்சுமி ஏமாற்ற ப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஏமா ற்றப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைப்ப தற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஜனநாயக இயக்கங்கள் தற்போது இக்குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட தொடங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரும் உடனடியாக தலையிட்டு தவறு இழைத்த காவல்துறையினர் மீது உரிய நடவ டிக்கை எடுக்கவும், இளம்பெண் லெட்சுமி யின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், காவல்துறையினரின் அத்துமீறல் அடிப்ப டையிலும் வழக்கு பதிவு செய்து மேல் நட வடிக்கைக்கு உத்தரவிடவும் வேண்டும். சந்தி ரனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மீது காலம் தாழ்த்தாமல் சட்டத்தின்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று லெட்சுமியின் தாயார் மாரியம்மாள், தந்தை முத்து கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர். காவல்துறை யின் மெத்தனப் போக்கிற்கு காரணமான நன்னிலம் துணை கண்காணிப்பாளர் சுகுமாற னிடமும் உரிய விசாரணை மேற்கொண்டு துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
(ந.நி)