tamilnadu

img

அரசுத் திட்டங்களில்  ஆளும் கட்சியினருக்கு முன்னுரிமை  சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம்

 திருத்துறைப்பூண்டி, ஆக.28-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சியில் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கு ஊராட்சியில் வெட்டப்படும் குளங்களை, குளங்களை உபயோகிப்பாளர் குழுவிற்கு வழங்காமல் ஆளும் கட்சியினருக்கு வழங்குவதை கண்டித்தும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் 10,000 ரூபாய் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமையில் வீடு வழங்குவதை கண்டித்தும் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர்கள் டி.வி.காரல் மார்க்ஸ், வி.டி.கதிரேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் அ.பாஸ்கர், தி.மு.க ஒன்றியச் செயலாளர் அ.பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.எம் மாவட்டச் செயற்குழு கே.என்.முருகானந்தம், சி.ஜோதிபாசு, சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு ஆர்.ஜி.ஞானமோகன், கே.ராஜா, தி.மு.க சார்பில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இளையராஜா உள்ளிட்ட ஒன்றியக்குழு, கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.