tamilnadu

ஐ.ஏ.எஸ்  சங்கத் தலைவராக பணீந்திர  ரெட்டி தேர்வு

 மன்னார்குடி டிச.28- தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கள் சங்கத்தின் புதிய தலை வராக அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப் gட்டுள்ளார்.  தமிழகத்தில் தற்போது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கென தனி யாக சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த டேவிதார் ஓய்வு பெற்ற நிலையில் வணிக வரித்துறை ஆணையராக இருந்த டி.வி.சோமநா தன் புதிய தலைவராக செயல் பட்டு வந்தார். தற்போது அவர் மத்திய அரசின் நிதித்துறை செலவினப் பிரிவு செயலாளராக நிய மிக்கப்பட்டதால் சங்கத் தலைவர் பதவி காலியாக இருந்தது.  இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணை யரான கே.பணீந்திர ரெட்டி  தமிழக ஐ.ஏ.ஏஸ் அதிகாரி கள் சங்கத்தின் புதிய தலை வராக தேர்வு செய்யப் பட்டார். துணைத் தலைவராக பங்கஜ்குமார் பன்சல், செய லாளராக மைதிலி கே. ராஜேந்திரன், இணை செய லாளர்களாக டி.ஜெகநாதன் லட்சுமிப்பிரியா, பொருளா ளராக கிருஷ்ணன் உன்னி, செயற்குழு உறுப்பினர்க ளாக எம்.எஸ்.சண்முகம், பூஜா குல்கர்னி, வி.ராஜா ராமன், கே.நந்தகுமார், ஏ.ஆர்.அருள்நாத், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஜெ. மேகநாத ரெட்டி, கே.பி.கார்த்திகேயன், கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.

;