tamilnadu

img

தூர்வாரும் பணிகள் துட்டுவாரும் பணிகளாக மாறக் கூடாது குறைதீர்க் கூட்டத்தில் ஜி.சுந்தரமூர்த்தி பேச்சு

திருவாரூர், மே 21- ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் நீர் அணையை திறந்து விட்டு தூர்வா ரும் பணியை தொடங்குவது என்பது விவசாயிகளின் எதிர்ப்பையும் பொ ருட்படுத்தாமல் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. இந்த ஆண்டு கொரோனா அசாதாரண சூழ்நிலை யைப் பயன்படுத்தி அரசு அறி வித்துள்ள குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணி துட்டு வாரூம் பணி யாக மாறி விடக் கூடாது என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.  திருவாரூரில் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வட்டாட்சியர் அலுவல கத்திற்கு மாற்றி முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் அவசர கதியில் நடத்தியதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசா யிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன் பிறகு வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் விவ சாயிகள் இயக்கத் தலைவர்கள் ஜி. பழனிவேல், பி.எஸ்.மாசிலாமணி,  ஜி.பவுன்ராஜ், என்.இடும்பையன், ராஜாங்கம், ஜி.வரதராஜன், ராம மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் பேசிய ஜி.சுந்தர மூர்த்தி, தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. விவசாயிக ளின் கோரிக்கையை ஏற்று ஜூன் 12  ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் லாபகரமான முறையில் குறுவை சாகுபடியில் ஈடுபட முடியும். ஆனால் அதற்கான அனைத்து வசதி களையும் அரசு செய்து தர வேண்டும்.  

ஏபி வாய்க்கால்களை தவிர்த்து விவசாய நிலங்களுக்கு நேரடியாக தண்ணீர் சென்று சேர்வதற்கு துணை யாக இருக்கக் கூடிய கிராமப்புற வாய்க்கால்களை, வடிகால்களை 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக மனித உழைப்பை பயன்படுத்தி செம்மையாக தூர்வாரி செப்பனிட வேண்டும். இதன் மூலம் இந்த நோய்த்தொற்று பாதிப்பு காலத்தில் விவசாயிகளும், விவசாயத் தொழி லாளர்களும் பெரும் பலன் அடை வார்கள். மேலும் தரமான விதை எளி தான முறையில் விவசாய கடன்  போன்றவை வழங்கப்பட வேண்டும். 430 ஊராட்சிகளிலும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  விவசாயச் சங்க மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலா மணி பேசுகையில், ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடும் அறி விப்பிற்கும், குடிமராமத்து பணி அறிவிப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்து சந்தேகப்பட வுள்ளது.

அலிவலம் ஊராட்சியில் கூட்டுறவு சங்கத்தின் நடைபெற்ற முறைக்கேடுகள் விசாரித்து சங்க தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். முறைகேட்டிற்கு துணை போகும் தம்பதியர்களான கிராம நிர்வாக அலுவலர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஜி.பழனிவேல் பேசுகையில், குடிமராமத்து பணி குறித்த வெளிப்படைத் தன்மை விவ சாயிகளுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் விவசாயிகள் திரண்டு பணிகளை நிறுத்தும் சூழ்நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.  அரசு அறிவித்துள்ள பேக்கேஜ் முறை ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதால் குடிமராமத்து பணியில் அந்த முறையை கைவிட வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் ஒரு மித்த குரலில் கருத்து தெரிவித்த னர். கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டாட்சியர் நக்கீரன் விவசாயிக ளின் கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தார்.