tamilnadu

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பவித்திரமாணிக்கம் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு

திருவாரூர், ஜூலை 20- திருவாரூர் வட்டம் இள வங்கார்குடி ஊராட்சி பவித்தி ரமாணிக்கத்தில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பு பகுதியில் 60- க்கும் மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இங்கு திட க்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்து வதற்கு இடம் தேர்வு செய்ய ப்படுவதாக தெரிய வந்த நிலையில் இதற்குஎதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வ ருக்கு மின் அஞ்சல் மூலம்  கோரிக்கை மனு அனுப்ப ப்பட்டது.  மேலும் மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. இது குறித்து குடியிருப்போர் நலச் சங்க தலைவர் எஸ்.நவ மணி, செயலாளர் செ.பரி சுத்தம், ஜி.ஆர்.டி நகர் நல தலைவர் எஸ்.ராமசாமி ஆகி யோர் அனுப்பியுள்ள மனு வில், வீட்டு வசதி வாரிய குடி யிருப்பு, ஜி.ஆர்.டி நகர் ஆகிய பகுதிகளிலும் அருகே யுள்ள இரண்டாவது வார்டு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இதன் மையப்பகுதியை தேர்வு செய்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அம ல்படுத்த முயற்சிப்பதை கை விட வேண்டும். தேர்வு செய்யப்படவுள்ள இடத்தி ற்கு அருகில் குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மை யமும் செயல்பட்டு வரு கிறது. எனவே மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இத்தி ட்டத்தை அமல்படுத்த மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்க ளின் எதிர்ப்பை அடுத்து மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்து அதிகாரி கள் ஆலோசித்து வருவதாக  தெரிகிறது.