tamilnadu

img

மின் கட்டணம் அதிகரிப்பு: சிபிஎம் கையெழுத்து இயக்கம்

திருவாரூர், ஜூன் 30- கொரோனா நோய்த்தொற்று பேரிடர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொது  முடக்கத்தை அறிவித்துள்ளது. இதன் காரண மாக மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்பின் காரணமாக பொதுமக்கள் அதிக மின்கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் உள்ளனர். எனவே அதிகரித்துள்ள மின்கட்ட ணத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்  என கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவாரூர் நகராட்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி  வைத்தார். திருவாரூர் ஒன்றியம் புலிவலம் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமையில், கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.பழனிவேல் தொடங்கி வைத்தார்.