tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தத்தில் மின் ஊழியர்கள் பங்கேற்பு

திருவாரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூர் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. திட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன் ஆகியோர் ஜன.8 வேலை நிறுத்தம், மாநாடு குறித்து சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தின், அகில இந்திய மாநாட்டிற்கான நிதி வசூலினை தொடர்ந்து நடத்தி நிதி அளிப்பது, ஜன.8 வேலை நிறுத்தத்தை திருவாரூர் மாவட்டத்தில் மின் அரங்கத்தில் முழுமையாக பங்கேற்பது. டிச.25 அன்று வெண்மணி நினைவு தினத்தன்று மின் ஊழியர்கள் டூவீலர்களில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்துவது உள்ளட்டவை முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மன்னார்குடி கோட்டத் தலைவர் எஸ். மோகனசுந்தரம், மன்னை கோட்டச் செயலாளர் ஜி.வீரபாண்டியன், திருவாரூர் கோட்டத் தலைவர் ஆர்.முரளிதரன், கோட்டச் செயலாளர் டி.தமிழரசன், நிர்வாகி ஏ.ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.