tamilnadu

img

பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்கக் கோரி மறியல்

திருத்துறைப்பூண்டி, அக்.5- கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்கிட வலியுறுத்தி சிபிஐ திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர குழுவின் சார்பில் திருத்து றைப்பூண்டி பழைய பேருந்து நிலை யம் அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன் தலை மையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்ட துணை செயலாளர் இரா.ஞானமோகன், சிபிஐ ஒன்றிய செயலாளர் அ.பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி.வி.சந்திர ராமன், நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.