tamilnadu

img

கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

குடவாசல், ஆக.9- திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் குடவாசல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரை அடங்கிய தொகுப்பு பையினை வழங்கி, பின்னர் கடைவீதியில் உள்ள வர்த்தக பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன், ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் கிளாரா செந்தில், துணைத்தலைவர் ரா.தென்கோவன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.