tamilnadu

நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

 திருவாரூர், ஆக.6- நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு மையங்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் தலைவர் கே.கே. ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஷ்வரன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், உள்ளாட்சித் துறை மாநி லத்தலைவர் நா.பாலசுப்ரமணியன், மண்டல செயலாளர் ஆர். மோகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கே.எஸ்.ராஜா நன்றி கூறினார். ஓய்வூதியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேமிப்பு கிடங்குகளுக்கு தேவை யான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். 100 சத வீதம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கிடு செய்ய வேண்டும். சுமைப் பணி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, காப்பீடு திட்டம், நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வரும் ஆக.15 ஆம் தேதியன்று திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது எனவும் முடி வெடுக்கப்பட்டது.