மன்னார்குடி, ஆக.19- தீக்கதிர் - செம்மலர் உள்ளிட்ட தொழிலாளி வர்க்க இதழ்களுக்கு தனது வா ழ்க்கையின் பெரும் பகு தியை அர்ப்பணித்தவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினரும் மன்னார்குடி நகர முன்னாள் செயலாளருமான கே.நீல மேகத்தின் 7-வது நினைவு தினம் புதன்கிழமை மன்னார்குடி நகரக்குழுவால் கடைபிடிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சி கள் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றன. 29-வது வார்டில் இயங்கி வரும் மக ளிர் கட்சிக் கிளைக்கு தீக்க திர்-செம்மலர் இதழ்களுக்கு ஓராண்டு சந்தாக்களை அன்பளிப்பாகவும், நகரக்கி ளைக்கு ரூ.2000-ஐயும் நிதி யாகவும் தமுஎகச மாவட்ட தலைவர் இரா.தாமோதரன் அளித்தார்.