குடவாசல், ஆக.6- குடவாசல் ஒன்றியத்தில் உள்ள தேதியூர் ஊராட்சியில் மாவட்ட நிதிக்குழு மானிய நிதியில் இருந்து 20 லட்சம் மதிப்பில் பாடசாலை முதல் கூத்தாளம்மன் கோயில் திடல் வரையில் தார்ச் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஊராட்சித் தலை வர் தலையாமங்கலம் பால சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். முன்னதாக புதி தாக கட்டப்பட்டு வரும் குட வாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகளை பார்வையிட்டு, அலுவல கத்துக்கு சுற்றுச்சுவர் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய் யப்படும் என்றார். மேலும் மஞ்சக்குடி ஊராட்சி- நார்சிங்கம் பேட்டை சோழ சூடாமணி ஆற்றின் குறுக்கே மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து கட்டப்பட்ட நடை பாலத்தினை பார்வையிட் டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாப்பா.சுப்பரமணியன், க.சுப்பரமணியன், ஒன்றிய தலைவர் கிளாரா செந்தில், துணைதலைவர் ரா.தென் கோவன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஜோதிராமன், ஊராட்சி தலைவர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறு முகம், (கி.ஊ)சுப்பிரமணி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.