குடவாசல், செப்.23- எரவாஞ்சேரி ஒன்றியத்தில் உள்ள அதம்பாவூர் கிரா மத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்தனர். மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி உரையாற்றினார். முன்னதாக வாலிபர் சங்க கொடியினை மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஏற்றி வைத்து வரவேற் புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.அன்பழகன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் தீனதயா ளன், ஒன்றிய துணைத் தலைவர் ராம் பிரசாத், ஒன்றிய குழு உறுப்பினர் சின்னராசா, நன்னிலம் ஒன்றிய பொருளாளர் சுரேந்தர், குடவாசல் பகுதி ஒன்றியத் தலைவர் பி.குமரேசன் மற்றும் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.