tamilnadu

img

மாதம் 10 நாள் மட்டுமே வேலை ஏசிசிஎல் ஆலை முன்பு தொழிலாளர்கள் ஆவேசம்

திருவள்ளூர், டிச.15-  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1987-ல் ஏசிசிஎல் தொழிற்சாலை துவங்கப்பட்டது. இதில் எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்கு தேவை யான பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் 152 பேர் நிரந்தர தொழி லாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பல்வேறு காரணங்களால் கடந்த 3 மாதங்களாக உற்ப த்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2.5 மாதம் ஊதியம் வழங்க வில்லை.  மேலும் 13 மாதங்கள் வருங்கால வைப்பு நிதி (பி.எப்), கிராஜிவிட்டியும் தொழி லாளர்களின் பெயரில் நிர்வாகம் செலுத்தவில்லை. மேலும் தற்போது மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே தொழிலாளர்க ளுக்கு பணி வழங்குகிறது நிர்வாகம். இதனால் தொழி லாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 1 வருடமாக ஓய்வூதியம் வழங்கவில்லை. 6 மாதமாக ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்காத தால் வேலையை விட்டே சென்றுவிட்டனர்.  தொழிற்சாலையில் உற்பத்தியை துவங்க வேண்டும், ஊதியம் வழங்க வேண்டும், பி.எப், கிராஜி விட்டியை நிர்வாகம் கட்ட வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், இப்பிரச்சனை யில் சங்கத் தலைவர் குசேலர் தலையிட்டு  தீர்வு காண வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏசிசிஎல் தொழிற்சாலை முன்பு தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னேற்ற அணியின் செயலாளர் ஏ.ஜி.ராஜேந்தி ரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், நிர்வாகிகள் வி.ஜோசப், எஸ். கதிர்வேல், எண்ணூர் அசோக்லேலண்ட் முன்னாள் பொதுச் செய லாளர் சர்குணம், முன்னேற்ற அணி இணைச் செயலாளர் சந்திரசேகரன், எம்.ராஜா, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.