tamilnadu

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

திருவள்ளூர், ஏப்.28-திருவள்ளூர் அருகே உள்ளது அதிகத்தூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த சில நாட்களாக திடீர் மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும் இந்திராநகர் பகுதியில் குடிநீரும் சரிவர விநியோகிக்கப்படவில்லை என கூறப்படும்.அடிக்கடி அதிக மின் அழுத்தம் ஏற்படுவதால், வீடுகளில் உள்ள டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதன பொருட்களும் சேதம்அடைந்து வந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் அவதிப்பட்டனர்.மின்தடையை சரி செய்ய தவரிய மின்வாரியத்தை கண்டித்தும், குடிநீர்விநியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி பெண்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர்காலி குடங்களுடன் ஞாயிறன்று மேல்நல்லாத்தூர்- அகரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல்அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்கவும், மின் தடையை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இப்பகுதிக்கு 3 ஆழ்துளைகிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. ஊராட்சி செயலர் சரிவர தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபற்றி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பலன்இல்லை. குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். அறிவிக்கப்படாத மின் தடையாலும் பாதிக்கப்பட்டு உள்ளோம்” என்றனர்.

;