tamilnadu

img

திருவள்ளூர் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ. 9ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்டு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.26) திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்டத் தலைவர் சிவா,  செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.