tamilnadu

img

ஊழியர்களின் போராட்ட எதிரொலி நிலுவைத் தொகையில் ரூ.13.5 லட்சம் கிடைத்தது

திருவள்ளூர், நவ.9-  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றி யத்தில் 49  ஊராட்சிகளில் பணிபுரியும் 270 டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்க ளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, பூண்டி பி.டி.ஒ அலுவலகம் முன்பு காத்தி ருக்கும் போராட்டம் நடத்த ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள்  திட்ட மிட்ருந்தனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை யன்று(நவ.9) உள்ளாட்சி துறை ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன்,  உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், சி.பி.எம்  வட்டச் செயலாளர் ஆர். தமிழரசன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ்,  பீடி சங்க மாவட்டச் செயலாளர் முருகன், பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் என். பரந்தாமன், சி. இரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் தவணையாக ரூ. 13 லட்சத்து 50 ஆயிரத்தை  தொழிலாளர்க ளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மீதி தொகையை உடனே வழங்குவதாகவும் அதி காரிகள் கூறினர்.  இதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்ப ட்டது.