திருவள்ளூர், மே 15- திருவள்ளூரை அடுத்தவேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுசிறீ, யாமினிசிறீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.தனுசிறீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுசிறீ இதழியல் அல்லது பி.ஏ. (டிபன்ஸ்) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கிச் சென்றிருப்பது தெரிந்தது.மேலும் வீட்டில் இருந்த 10ஆம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுசிறீ தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி.இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்கவேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் மனவேதனை அடைந்த தனுசிறீ இதுபற்றிவாட்ஸ்-அப் மூலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளிச் சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார்தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாகநடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை காவல்துறைக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.காவல்துறையினர் விஜயபாஸ்கரையும், மாணவி தனுசிறீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.