திருத்தணி, மார்ச் 14- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 5 பள்ளி மாணவர்கள் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில் கரைப் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த வேலன் (13), 6ஆம் வகுப்பு மாணவன் சூர்யா (11) ஆகிய இருவரும் குளத்தில் சேற்றில் சிக்கி மூழ்கிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள் கூச்சல் போட்டனர். கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்த ஒருவர் குளத்தில் குதித்து சூர்யாவை மீட்டு காப்பாற்றினார். இருப்பினும் குளத்தில் சேற்றில் சிக்கிக்கொண்ட வேலனை மீட்க முடியாத நிலையில் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.