திருவள்ளூர், ஜூன் 24- திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக் கும் ஆயிரம் ரூபாய் நிவார ணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு, கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கொரோனா தொற்று பர வல் அதிகமாக உள்ள திரு வள்ளூர், பொன்னேரி, மீஞ் சூர், கும்மிடிப்பூண்டி பேரூ ராட்சிகள், பூந்தமல்லி, திரு வள்ளூர், சோழவரம் ஒன்றி யங்களிலும் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இந்த பகுதி களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயி ரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறி வித்துள்ளது. ஆனால், மாவட்ட நிர்வா கம், மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்ப டுத்தியுள்ளது. ஆரம்பாக்கம் முதல் ஆர்.கே.பேட்டை வரை காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து சோதனை செய்கின்றனர். இருசக்கர வாகனங்களில் கூட பணிக்கு செல்ல அனுமதி மறுக்கின்ற னர். வடசென்னை அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு கூட பணிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. செவ்வாய்பேட்டையில் வேலைக்கு சென்ற மின் வாரிய தொழிலாளியை தாக்கிய மோசமான நிகழ் வும் நடந்துள்ளது. மாவட் டத்திற்குள் அவசர தேவைக்கு இரு சக்கர வாக னத்தில் செல்பவர்களிடம் கூட இ-பாஸ் கேட்கப்படு கிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடி தத்தில் கூறப்பட்டுள்ளது.