tamilnadu

img

சிறையில் பக்குவப்பட்டவர் ‘சிவப்பு சட்டை’ பலராமன் படத்திறப்பு நிகழ்வில் ஜி.மணி புகழஞ்சலி

திருவள்ளூர், ஜூலை 29-  சிறைச்சாலையில் பக்குவப்ப டுத்தப்பட்டவர் ‘சிவப்பு சட்டை’ பலராமன் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு உறுப்பி னர் ஜி.மணி கூறினார். மீஞ்சூரை அடுத்த சுப்புரெட்டி பாளை யத்தில் செவ்வாயன்று (ஜூஐல 28) மறைந்த தோழர் ‘சிவப்பு சட்டை’ கே.பலராமன் உரு வப்படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இத னையொட்டி நினைவு கல்வெட்டு திறப்பு, நினைவு கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வு களும் நடைபெற்றன. செங்கொடியை அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தின் மத்திய நிர்வா கக்குழு உறுப்பினர் ஜி.மணி ஏற்றினார். மூத்த  தோழர் ஆர்.நாகரத்தினம் கல்வெட்டை திறந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன் உருவப்படத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய ஜி.மணி, “1952 முதல் பொன்னேரி சட்டமன்ற தனித்தொகுதியாக இருந்தாலும், இங்கு அனைத்துவடிவமான தீண்டாமை கொடுமைகளும் உள்ளது.

வஞ்ஜிவாக்கத்தில் தலித்துகள் குளத்தில்  இறங்கி தண்ணீர் எடுக்க கூடாது, திருப்பாளை வனம் பகுதியில் கோவிலை சுற்றிலும் தலித்துக்கள் வீடுகள் கட்டக் கூடாது போன்ற வற்றை எதிர்த்து செங்கொடி இயக்கம் பெரும்  போராட்டத்தை நடத்தியது. அதில் பல ராமன் பங்கு மகத்தானது” என்றார். “நிலம் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு 45  நாட்கள் சிறையில் இருந்தவர் தோழர் பல ராமன். அந்தக்காலத்தில் சிறையில் சிமெண்ட்  தரையில் தண்ணீரை ஊற்றி அதன் மீது கூழை ஊற்றுவார்கள். அதை அப்படியே வழித்து சாப்பிட வேண்டும். “மாங்குயில் கூவும் பூஞ்சோலை எம்மை மாட்ட நினைத்தி டும் சிறைச்சாலை” என்று பாரதிதாசன் சொன்னதுபோல, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகள் சிறைவாசத்திற்கு அஞ்சவில்லை.

அதுபோன்று பல கொடுமை களை சிறைச்சாலையில் அனுபவித்து பக்கு வப்பட்டவர் பலராமன். எனவேதான், தனது  இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் இயக்கத்தில்  இருந்தார்” என்று புகழாரம் சூட்டினார். சிபிஎம் கிளை செயலாளர் எம்.பரந்தாமன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால்,  மாவட்ட குழு உறுப்பினர் ஜி.விநாயகமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன், ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்றம் தலைவரான ஜி.பாலன், துணைச் செய லாளர் செந்தில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரதாப்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். தோழர் பலராமனி மகன் சிபிஐ முன்னாள் ஒன்றிய செயலாளர் கே.கிருஷ்ணன் நன்றி கூறினார்.