திருவள்ளூர், ஆக. 13 - பொய் வழக்கை திரும்ப பெறுவதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டக்குழு உறுப்பின ராகவும், மெய்யூர் கிராம கிளைச் செயலாள ராகவும், பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளராகவும் முருகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாரதி என்ப வர், ஜூலை 13 அன்று முருகன் மற்றும் முன்னணி ஊழியர்கள் மீது தரக்குறைவான வார்த்தைகளோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆதாரமில்லாத குற்றச் சாட்டுகளை பரப்பி வருகிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சி சார்பில் பெரியப்பாளை யம் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி யிடம் இரண்டு முறை புகார் அளிக்கப் பட்டது. அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த முருகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொய் வழக்கு பதிவு செய்தார். இந்த அராஜத்தை கண்டித்து வியாழ னன்று (ஆக.13) பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் கூடினர். இந்த தகவலை அறிந்து அங்கு வந்த காவல்துறை யினர் தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொய் வழக்கை திரும்ப பெறுவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி. பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், திரு வள்ளூர் வட்டச் செயலாளர் ஆர்.தமிழர சன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, என்.கங்காதரன், வட்டக்குழு உறுப்பினர் கே.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.