திருவள்ளூர், மார்ச் 10- திருவள்ளூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.10 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளன. இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (மார்ச் 10) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 5 லட்சத்து 93 ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் சமுக தணிக்கையின் போது 4 ஆயிரத்து 603 பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதில் ரூ. 5.81 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. ரூ.13.53 கோடி முறையற்ற செலவு கள் செய்துள்ளனர். 2018-19 ஆம் ஆண்டில் நடந்த சமுக தணிக்கை யின் போது 6 ஆயிரத்து 946 பிரச்சனை கள் எழுந்துள்ளன. இதில் ரூ.4.13 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மற்றும் அனுமதியின்றி ரூ. 71 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் களை பெறப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. இது குறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மூலம் பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிய வேண்டும், நிலுவையில் உள் ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும், தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை, வாரம் தோறும் ஊதியம், சம்பளச் சீட்டு வழங்க வேண்டும், வேலை தளத்தில் ஏற்படும் இறப்பிற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகில் செவ்வா யன்று (மார்ச் 10) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி. கண்ணன் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஜி.மணி, மாவட்டப் பொருளாளர் எம்.கருணா, துணைச் செயலாளர்கள் இ.தவமணி, பி.அருள், என்.கங்காத ரன், துணைத் தலைவர் இ.ராஜேந்தி ரன், டி.சரளா, டி.குமார் உட்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாச்சியரிடம் வழங்கி னர்.