திருவள்ளூர், டிச.3- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலு வலர்களுடனான முன்னே ற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் செவ்வாயன்று (டிச.3)நடைபெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான தேர்தல் ஒரே வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும். 24 வார்டுகளுக்கான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களு க்கு உட்பட்ட 230 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 526 கிராம ஊராட்சித் தலைவர்களு க்கும் மற்றும் 3945 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் 2577 ஆகும். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 13.56.639. இதில் 6.68.085 ஆண் வாக்காளர்களும் 6.88.331 பெண் வாக்காளர்களும், 223 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் நடத்தை விதி கள் குறித்தும், அதை அமல்படுத்தி செயல்படுத்து வது குறித்தும், தேர்தல் நடத்தும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலு வலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி, உரிய வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டு, நட வடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்ட றிந்து, அந்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடி களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் வைக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.