tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 18-   குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி  ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள அம்மையார் குப்பத்தில் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசிக்கின்றனர். இப்பகுதில் 48 தெருக்கள் உள்ளன. 4 தெருவிற்கு ஒரு குடிநீர் தொட்டி என்ற விதத்தில் 18 தொட்டிகள் உள்ளன. தற்போது நிலத்தடி நீர் வறண்டு விட்டதால், தொட்டிகளில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. புதிய ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை.  இதனால் கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனையை மாவட்ட நிர்வாகம்  கண்டு கொள்ளா மல் உள்ளது. இந்நிலையில் அம்மை யார் குப்பம் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குடிநீர் பிரச்சனையை விரைந்து  தீர்ப்பதாக தெரிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு அம்மையார் குப்பம் கிளை செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் எஸ். கோபால்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பெரு மாள், என்.கங்காதரன், வட்டச் செயலாளர் கே.ஜி.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.