tamilnadu

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

பொன்னேரி, மே 6-திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கேசவபுரத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (40). இவர் ஊராட்சி உதவியாளர். இவரது மனைவி சர்மிளா (36). இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்கிறார். இருவரும் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதுவதற்காக, கடந்த 1ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்கு சென்றனர்.இந்நிலையில் இவர்களின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மதன்குமார், சர்மிளா ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்தனர். வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 10 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய், பட்டுப் புடவைகளை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து மதன்குமார் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

;