tamilnadu

ரயில் நிலைய குற்றங்களை தடுக்க பயணிகளிடம் விழிப்புணர்வு


திருவள்ளூர், மார்ச் 5- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் புறநகர் ரயிலில் நகைகள், பணம், கைபேசி போன்றவற்றை நூதனமாக பறித்துச் செல்வது, தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகளிடம் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பெண் பயணிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் ஆபத்து நேரங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 1512, மற்றும் 9950000 என்ற இலவச எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;