திருவள்ளூர், ஜூன் 29- மனித உரிமை மீறலில் ஈடுபடும் காவ லர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சி, பூந்தமல்லி, ஈக்காடு, சோழ வரம் ஒன்றியங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தகாலக் கட்டத்தில் பணிக்கு சென்ற மின்ஊழியரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். அத்தி யாவசிய பணிக்கு செல்லும் ஊழியர்களை மரியாதை குறைவாக நடத்தி, நீண்டநேரம் காக்கவைத்து அனுப்புகின்றனர். திருவள்ளூர் பஜாரில் டீக்கடை பாய்லரை சாலையில் தூக்கி போட்டு சேதப்படுத்தி உள்ளனர். சிறுகடை வியாபாரிகளை தாக்கி யுள்ளனர். இறைச்சிகளை பறித்து செல்வது போன்ற அராஜக செயலில் ஈடுபடுகின்றனர். மீஞ்சூர், நந்தியம்பாக்கம் மதுக்கடை அருகே இளைஞர் ஒருவரை உதவி ஆய்வா ளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு காவ லர்கள் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கி யுள்ளனர். உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் பகுதி தலை வர் பி. கதிர்வேலை, சாலையில் வைத்து தாக்கி, வழக்கு பதிந்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் மீது மனித உரிமை ஆணையம் தலையிட்டுள்ளது. எனவே, தவறு செய்யும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.