திருவண்ணாமலை, மார்ச் 4- திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்வு கூட்டம் வரும் 10 ஆம் தேதி (திங்கள்) அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது. திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் திருவண்ணாமலை வட்டம் மற்றும் நகரம், முத்துவிநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள சாரணர் , சாரணி யர் வளாகத்தில் (பேருந்து நிலையம் அருகில்) நடைபெற உள்ளது. திரு வண்ணாமலை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயனடையுமாறு திருவண்ணா மலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.