tamilnadu

img

ஆட்சியர் பேச்சுவார்த்தையில் மின்கோபுர பணிகள் நிறுத்தம்

திருவண்ணாமலை, ஜூன் 20- திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் வகையில் அமைக்கப்படும் உயர் மின்கோபுர பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தால்  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ தோடு, விவசாய சாகுபடி முற்றிலும் அழியும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் கோபுரம் அமைப்பதற்கு முன் அந்த நிலத்தின் விவசாயிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள், கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை கிளியாப்பட்டு ஊராட்சி குண்ணுமுறிஞ்சி கிராம பகுதிகளில் சிறு விவசாயிகளின் நிலங்களில் அவர்களின் அனுமதி இல்லாமல் டவர்களை இணைக்கும் பணி துவக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற விவசாயிகள் போராட்டத்தில் பணி நடைபெறக் கூடாது எனக் கூறி டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளோடு பேச்சவார்த்தை நடத்தினர்.  அப்போது புதனனறு மாவட்ட ஆட்சியருடன் ஆலொசனை நடத்தி, உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் எனக் காவல் துறையினர் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். அதன்படி மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் எஸ்.அபிராமன் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமும், உயர் மின் கோபுரம் அமைப்பவர்களிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதுவரை பணிகள் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.