tamilnadu

திருவண்ணாமலை, திருவனந்தபுரம் முக்கிய செய்திகள்

தகுதித் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் ஆசிரியைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை,செப்.23- திருவண்ணாமலையில்,  த பெஸ்ட் மழ லையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 20 க்கும்  மேற்பட்ட ஆசிரியைகள், கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் கடந்த ஆண்டு,  தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் தகுதித்தேர்வு முதலாம் ஆண்டு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள னர். திருவண்ணாமலை தியாகி அண்ணா மலை பிள்ளை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதி முடித்த இவர்கள், இரண்டாம் ஆண்டிற்கான சேர்க்கை கட்டணத்தை, அந்தப் பள்ளியில் உள்ள கண்காணிப்பாளர் மோகன் சுந்தரம் என்பவரிடம் கொடுத்துள் ளனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் தலா  10 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக கண்கா ணிப்பாளரிடம் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் அந்த திறந்த பள்ளிக் கல்வி தேசிய நிறுவனத்தில் பணம் கட்டத்  தவறியதால் நாங்கள் தேர்வு எழுத முடியா மல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது என  குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.   தேர்வு எழுத முடியாத நிலை குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறியவர்கள், திங்களன்று(செப்.23)  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  இந்த தேர்வை எழுத முடியவில்லை என்றால், நாங்கள் ஆசிரியர் பணியை தொடர முடி யாது. எனவே இந்த தேர்வை எழுத எங்க ளுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை  மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு ஸ்ரீசித்திரத் திருநாள் விருது

திருவனந்தபுரம், செப்.23- ஸ்ரீ சித்திரத் திருநாள் மன்னரின் நினை வைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் டிரஸ்ட், ஸ்ரீ சித்திரத் திருநாள் தேசிய விருதை ஒவ்வொரு ஆண்டும்  வழங்கிவருகிறது. 2006ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கலை, மருத்துவம்,  சினிமா, பொது அரசியல் ஆகிய துறைகளின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பிரபல மானவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து விருது  வழங்கப்படுகிறது. ஸ்ரீ சித்திரத் திருநாள் தேசிய விருது மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கியதாகும். இந்த ஆண்டுக்கான விருது இஸ்ரோ தலை வர் டாக்டர் கே.சிவனுக்கு  வழங்கப்படவுள்ளது.  டிரஸ்ட் தலைவர் டி.பி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சுரேந்திரன் பிள்ளை, ஏசியா நெட் செய்தி ஆசிரியர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், மேனேஜிங் டிரஸ்டி டி.சதீஷ்குமார், ஸ்ரீ சித்திரத் திரு நாள் பள்ளி முதல்வர் எஸ்.புஷ்பவல்லி ஆகி யோர் அடங்கிய தேர்வுக்குழு இஸ்ரோ தலைவர்  டாக்டர் கே.சிவனை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறையில் பெருமைமிகு சாதனை களைச் செய்து கொண்டிருக்கும் இஸ்ரோ தலைவர்  என்ற நிலையிலும் மற்றும் அவரது தனிப்பட்ட  சாதனைகளுக்காகவும் டாக்டர் கே.சிவனுக்கு  விருது வழங்கப்படுவதாகத் தேர்வுக்குழு அறி வித்துள்ளது.