tamilnadu

img

ஏரி மதகு உடைந்து 400 ஏக்கர் பயிர்கள் சேதம்

திருவண்ணாமலை, டிச.3- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டதில் 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி  சேதமடைந்தள்ளது.  வந்த வாசி அடுத்த மீச நல்லூர்  கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த  ஏரியின்  மூலம் 400க்கும் மேற்  பட்ட ஏக்கர் விவசாய நிலங் கள் பாசன வசதி பெற்று வரு கிறது. தற்போது, கடந்த  சில நாட்களாக திருவண்ணா மலை மாவட்டத்தில் பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக, பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.  திங்  களன்று, ஏரியின் கொள்ள ளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், தெள்ளார் செல்லும் சாலை பகுதியில் உள்ள ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டது.  இதனால் பெரிய ஏரியில்  இருந்து தண்ணீர் வெளி யேறி, விவசாய நிலங்களுக்  குள் புகுந்து சுமார் 400 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி  சேதமடைந்தது.  தகவலறிந்த  அரசு அலுவலர்கள் விரைந்து  சென்று ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வை யிட்டனர்.  பின்னர், ஏரி மதகில்  ஏற்பட்ட உடைப்பை தற்காலி கமாக மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்யும் பணி யில் ஈடுபட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட  அளவு 119 அடியாகும்.  தற்போது 95. 15 அடி தண்ணீர்  உள்ளது.  குப்பநத்தம் அணை யின் மொத்த நீர்மட்ட அளவு 59.04 அடியாகும்.  தற்போது 34.44 அடியாக நீர் அளவு  உள்ளது. மிருகண்ணடா நதி அணையின் மொத்த  நீர்மட்ட அளவு 22 . 97 அடி யாகும்.  தற்போது 12.63 அடி  நீர்மட்டம் உள்ளது. இதே போல்,  செண்பகத் தோப்பு அணையின் நீர் மட்ட அளவு  62.32 அடியாகும். இதில்  தற்போது 47.76 அடி நீர்மட் டம் உள்ளது.