திருவண்ணாமலை,மே 13-திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்திய பிறகும், மிரட்டியதால், லாரி ஓட்டுநர், குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், நவாப்பாளை யம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் திருப்பதி. இவர், தனது அண்ணன் பாஸ்கரிடம் கடன் வாங்கியிருக்கிறார். அதற்கு வட்டியும் கட்டியுள்ளார்.ஆனால், மீண்டும் மீண்டும் கடன் தொகையை கேட்டு மிரட்டிய பாஸ்கர், திருப்பதியின் வீட்டை பூட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த திருப்பதி(40) தனது, மனைவி, சுமதி(37), மகள்கள் மீனாட்சி(15), துர்கா(14) மகன் விமல்ராஜ்(13) ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணை ஊற்றி, தீக்குளிக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மாவட்ட ஆட்சியரக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள்.திருப்பதி குடும்பத்தினரின் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் பாஸ்கரன் குடும்பத்தினரை அரசு வாகனத்தில் நவாப்பாளையம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு, பாஸ்கரனிடமிருந்து சாவியை வாங்கிய அரசு அதிகாரிகள் திருப்பதி குடும் பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், திருப்பதியின் புகார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.