tamilnadu

img

சாதிச் சான்று கோரி குடுகுடுப்பை குடும்பத்தினர் உண்ணாநிலை

 தி.மலை,நவ.6- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அய்யம்பாளையம் புதூரில் சாதிச் சான்று இல்லாததால், பள்ளிக்கு செல்லமுடியாமல் தவிக்கும் கணிக்கர் (குடு குடுப்பை) இன மக்கள், குடும்பத்துடன் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளி க்கூட சாலையில் அய்யம்பாளையம் புதூர், அகழிக்கரை பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 300 க்கும் மேற்பட்ட கணிக்கர் எனப்படும் குடு குடுப்பை இன மக்கள் நிரந்தரமாக வசித்து வரு கின்றனர். பழங்குடியினர் பட்டியலில் வரும் இவர்கள், தங்களின் பிழைப்பிற்காக தினந்தோறும் பல்வேறு கிராமப் பகுதிகளுக்குச் சென்று, கைரேகை ஜோதிடம் பார்ப்பதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  இந்து கணிக்கர் பிரிவைச் சேர்ந்த தங்களை திரு வண்ணாமலை மாவட்ட த்தில் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காததால் இடஒதுக்கீடு பெற முடியா மல் தவித்து வருகின்றனர். மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பிற்கு இது வரை குடு குடுப்பைக்கார ர்கள் சமூகத்தில் இருந்து யாரும் சென்றதில்லை என வும், சாதிச் சான்றிதழை தமிழக அரசு இதுவரை வழங்காததால், பழங்குடியி னர் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி படிக்க முடியா மல், தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்போடு படிப்பை முடித்து விடுவதாகவும் குடுகுடுப்பைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.  பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்படாத தால் இடஒதுக்கீடு கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ள  தங்களுக்கு சாதிச் சான்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.