tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 26 கோடி பாக்கி தனியார் ஆலை முன் முற்றுகை

திருவண்ணாமலை,பிப் 24- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தரணி  தனி யார் சர்க்கரை ஆலை  கடந்த 2018- 19  ஆம் ஆண்டுகளில் கரும்பு அரைவை  செய்த வகையில் விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கி 26 கோடி ரூபாய்  உள்ளது. இந்த  பாக்கி பணத்தை வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு ஜி. மணி  தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில  பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், மாநில துணைத் தலைவர்  ஜனார்த்தனன், விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, ஆலை மட்டச்  செயலாளர் கே.  பாலமுருகன், மாவட்டத் தலைவர்  டி. கே. வெங்கடேசன்,  மாவட்டப் பொருளாளர் உதயகுமார்,  ஆதமங்க லம் புதூர் பகுதி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் தரவேண்டிய பாக்கி 26  கோடி ரூபாயை உடனே வழங்க  வேண்டும்,  மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஆதார  விலையின் படி, வழங்க வேண்டிய பாக்கி 65 கோடி ரூபாய் வழங்க வேண்டும், லாபத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி பங்கு பணமான 15  கோடி ரூபாயை  ஆலை நிர்வாகம்  வழங்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்து நிர்வாகிகள் உரையாற்றி னர்.   தொடர்ந்து வட்டாட்சியர், காவல்  துணை கண்காணிப்பாளர் ஆகி யோர், ஆலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்தப் பேச்சு வார்த்தையில், மார்ச் மாதத்திற்குள் பாக்கி பணத்தை தருவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது.  ஆனால் அதை ஏற்க மறுத்த விவசாயிகள்,  ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் 5 முறை பேச்சுவார்த்தை நடை பெற்றது. மேலும்  கடந்த 2020 ஜனவரி  மாதத்திற்குள்  பாக்கி பணத்தை தருவ தாக ஆலை நிர்வாகம் எழுத்துப் பூர்வ மாக  அறிவித்திருந்தது.  ஆனால் அதை தரவில்லை. எனவே தற்போது,  மார்ச் மாதம் பணம் தருவதாக இருந்தாலும் கூட,  தற்போதே விவ சாயிகளுக்கு  மார்ச் மாத தேதி யில், காசோலை வழங்க வேண்டும்  என்று கோரிக்கை வைத்து முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.