திருவண்ணாமலை, மே 27-திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பழைய பள்ளிக் கூடத் தெரு பகுதியில் கடன் பிரச்சனையால் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய செய்தள்ளது.பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சீனு (32) வேன் ஓட்டுநராக இருந்தார். இவர் ஆரணியிலுள்ள சுந்தரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, சொந்தமாக ஒரு லாரி வாங்கி உள்ளார். அந்த லாரி கடனில், 16 தவணைகள் செலுத்திவிட் டார். இன்னும் 3 தவணை தொகை பாக்கியுள்ளது. லாரி பழுதடைந்த தால் சில தவணைகளை கட்ட தாமதமானது. அப்போது, சுந்தரம் நிதிநிறுவன நிர்வாகிகள் கொடுத்த நெருக்கடி யால், மன உளைச்சல் அடைந்த சீனு, குடும்பத்தாருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில், சீனு, அவரது மனைவி விஜயலட் சுமி, மகன் ரித்திக் ரோஷன், மகள் தீவதர்ஷினி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். எஞ்சிய மகள் பிரிதிஸ்ரீ(8) உயிர் மட் டும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த சம்பவத்தில் அந்த குடும்பமே பலியானது.இந்நிலையில், காவல் துறை குடும்பத் தலைவர் சீனுவையே குற்றவாளியாக்கி, முதல் தகவல் அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்ததுடன், இந்த வழக் கில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தினரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில், சுந்தரம் நிதிநிறுவன மேலாள ரைக் குற்றவாளியாகச் சேர்த்து சட்டப்பிரிவு 306 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.