tamilnadu

img

மாணவர்கள் உறுதிமொழி

தி.மலை,மே.15-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்தாமல் இருக்கும் வகையில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடநூல்களில் இருந்து குறிப்பெடுத்து படிப்பதனாலும், பாடங்களை தெளிவாக புரிந்து கொண்டு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதனால் மாணாக்கரின் சிந்தனைத் திறன் வளரும், சுய வேகத்திற்கு கற்க வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு பாட நூலில் குறிப்பெடுத்து படிப்பதனால் எதிர்காலத்தில் கல்லூரி படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளில் மாணாக்கர் சிறந்து விளங்கவும், பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்துவதனால் மாணாக்கரின் சிந்தனைத் திறனை வளர்க்க முடியாது. அதனால் அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பாடங்களுக்கு கையேடுகளை (நோட்ஸ்) பயன்படுத்த மாட்டோம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் உறுதிமொழியை தினசரி எடுக்க அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்க ளுக்கும் தெரிவித்துள்ளார்.